வெள்ளி, 17 ஜூன், 2011

சமச்சீர் கல்வியும்- ஜெவின் மெத்தன போக்கும்!

என்னங்க சொல்றிங்க.
ஆமாங்க,

கடந்த ஆட்சியில் கடைசியாக கொண்டு வந்த திட்டம் சமச்சீர் கல்வி திட்டம்.. 

சமச்சீர் கல்வி னா  என்ன?
            அப்டினா, நம்ம தமிழ்நாட்டுல ஸ்டேட் போர்டு, மெட்ரிக், சிபிஎஸ்இ இப்புடி கல்வி பிரிவு இருக்கு இதேல்லாம் எடுத்துட்டு எல்லாத்துக்கும் ஒரே மாதிரியான கல்வி கொடுக்குறது தான் சமச்சீர் கல்வி.....

நல்ல விஷயம் தானே!.. இதே ஏம் பா? தடுக்குறாங்க....

இந்த திட்டம் வந்தா மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது... தற்பொழுது மெட்ரிக் பள்ளிகள் எங்க பள்ளியில் அந்த பயிற்சி சொல்லி தாறோம், இது சொல்லி தாறோம் காசு புடுங்க தான்  செய்றாங்க,

சில தனியார் பள்ளிகளின், முதலாளிகள் ஜெ-வை சந்தித்து சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க சொல்லி இருக்காங்க, 

தமிழகத்தில் இன்னும் இரு வாரங்களுக்கு எந்த பள்ளியிலும், வகுப்பு நடைபெறாது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது...

மாணவர்களுக்கு, பாடங்களை நடத்த முடியாமல் பள்ளிகள் திணறுகின்றன, இதனால் மாணவர்கள் பாதிப்பு அடைத்துள்ளனர்.....

இது இப்ப பத்தாம் வகுப்பு  பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் இத படிக்கவ அத படிக்கவானு தெரியாம முளிகிறாங்க...

தமிழக அரசும் இந்த விசயத்தில், ரொம்ப மெத்தனமாகவும், அவர்கள் நியமித்த குழுவில் எல்லாம் அவுங்க ஆளுங்க தான், ஆதலால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி வருவது  சந்தேகம் தான்!....

ஜெ! இவ்விசயத்தில் ஆமை வேகத்தில் இருப்பதாக செல்கிறார்.....

மாணவர்கள் நிலைமை அவ்ளோதான்! 


சில அரசு பள்ளிகளில் புத்தகம் இல்லாததால் விடுமுறை  விடுகின்றன,  ஆசிரியர் பள்ளிக்கு வந்து போரணி தான்  பேசுறாங்க!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP