வியாழன், 6 அக்டோபர், 2011

வெடி வெடிக்கவில்லை, சன்னுக்கு தொடர்ந்து நெருக்கடி தரும் அரசு கேபிள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

ஆட்சி மாற்றத்திற்கு  பிறகு அடக்கி வாசித்த சன் பிக்சர்ஸ், மீண்டும் "தல"-யின் மங்காத்தா வை  வெளியிட்டு தனது  இரண்டாம் இன்னிங்க்சை ஆரம்பித்து
 கல்லாவையும் கட்டியது...

பின்னர் விஷால் நடிப்பில் "வெடி" யை வெளியிட்டது... வெடி வந்த வேகத்தில் வெடிக்காமல் புஸ்  ஆனது, படம் தியேட்டரை விட்டு ஓட ஆரம்பித்துவிட்டது...



இதனால் சன் தரப்பு கொஞ்சம் சொகமாகியுள்ளது,

இது போததைக்கு  அரசும், அரசு கேபிளை செயல்படுத்துவதை தீவிரமாக இறங்கியுள்ளது, கட்டணச் சேனலான சன் மிகவும் நெருக்கடிக்கு  தள்ளப்பட்டுள்ளது  

மக்களின் ஆதரவு சன் குழும சேனல்களுக்கு இருந்தாலும், அரசு கேபிள்களில் சன் சேனல்கள் வருவது  இல்லை...

ஏன் சன் சேனல்கள் அரசு கேபிள்களில் தெரிவதில்லை?

சன் குழும அங்கமான "சன் டைரக்ட்" நம்பி இருப்பதே சன் குழுமச் சேனல்களை,

இந்த சேனல்களை அரசு கேபிளுக்கு கொடுத்துவிட்டால், சன் டைரக்ட் -ஐ இழுத்து மூட தான் செய்யனும்...

இதனால் தான் சன் குழுமச்சேனல்கள் அரசு கேபிள்களில் தெரிவது இல்லை...

சன் குழுமச் சேனல்களின் இணைப்பு குறைவதாக இருப்பதால்  சந்தை மதிப்பு மற்றும்  விளம்பர கட்டணமும் குறையே தொடங்கியுள்ளது.


சனி, 1 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தல் கலாட்டா- வாரி இரைக்கும் கட்சிகள், பண மழையில் நனையும் மக்கள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

அடுத்த தேர்தலுக்கு தயாராகிவிட்டது தமிழகம், இதுல அனைத்து கட்சிகளும் தனியாக களம் இறங்குவதால், மக்களுக்கு சந்தோசம் தாங்கலப்பா ஏனா அனைத்து கட்சிகளும் தங்களுடைய வெற்றிக்காக பணத்தை இரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது....



இதனால் மக்கள் பண மழையில் நனைய ஆரம்பித்துள்ளார்கள், இது தீபாவளி சமயம் வேற இது மக்களுக்கு " டபுள் தாமாகக "-னு சொல்லுங்க...

ஒரு ஓட்டுக்கு, நூறுல இருந்து ஐநூறு வரைக்கும் கொடுக்குராங்கப்பா!  


அரசியல் கட்சிகள் இதுக்கு ஒரு புதிய கதையை சொல்லுகின்றனர், அது என்னன்னா...

வரும் பாராளமன்ற தேர்தலுக்கு ஒரு ஒத்திகை என்று சொல்லுகின்றனர்.. 

புரியிராப்ள சொல்றேன்,

                             கட்சிகள் பெரும் வாக்குகளின் அடிப்டையில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாம்...

அதிமுக பெரும் திட்டத்தோடு இந்த தேர்தலில் தனியாக போட்டியிடுகிறது, ஜெ-க்கு  மீண்டும்  வந்து விட்டது பிரதமர் ஆசை, அதுக்காக இப்பவே ரெடியாகிவிட்டார். பிஜேபி உடன்  கூட்டணி அமைத்து போட்டியிடுவது தான் திட்டம்....

அதாவது, துணைபிரதமர் பதவி....


இதற்க்கு  அதிமுக-வின் தற்போதைய மூலவர் "சோ" கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாக  கூறப்படுகிறது...

திமுகாவோ கனிமொழி விடுதலையானால் காங்கிரஸ்-உடன் கூட்டணி, இல்லையேன்றால் இடதுசாரிகளுடன்  கூட்டணி...



காங்கிரசோ, அதிமுக மற்றும் தேமுதிகவுடன் தனி தனியாக பேசி வருகிறது...  

மற்ற கொசுறுகள் வழக்கம்  போல் தனிமரம்   தான்!..



பொறுத்து இருந்து பாப்போம்... அரசியல் கலாட்டவை...
IP