செவ்வாய், 21 ஜூன், 2011

படத்தை வாங்க முடியாமல் கதறும் கலைஞரின் நிதிகள்!.....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

கடந்த 3  ஆண்டுகளில் வெளியான படங்களில், கருணாநிதியின் பேரன்கள் வெளியிட்ட படத்தை தவிர மற்ற படங்கள் வெளிவந்த தடமே இல்லை அந்த அளவுக்கு இருட்டடிப்பு, ஆட்சியில் இருந்தால் மிரட்டல் என பல இன்னலுக்கு ஆளானார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ...

ஜெ அரியணையில், ஏறியதிலிருந்து கலைஞரின் நிதிகள், படத்தை வாங்க முடியாமலும், விற்க முடியாமலும் திணறுகின்றன....


சன் எடுக்க நினைத்த படங்கள், கை நழுவி போனது... தற்பொழுது சன் வசம் படம் ஏதும் இல்லை....


அவன் இவன் மற்றும் வேங்கை படங்களை சன் பிக்சர்ஸ் கைவிட்டுள்ளது,






சன் -கே இந்த கதினா, உதயநிதி, தயாநிதிக்கு? 



உதயநிதி பெரும் பொருட்செலவில் எடுத்த படம் " ஏழாம் அறிவு" பட பிடிப்பு முடிந்த நிலையில், படத்தை வெளியிட முடியவில்லை...

தயாநிதியோ கொஞ்சம் தேம்பா இருக்காரு, காரணம் அவர் பெரும் பொருட் செலவில் எடுத்த படம் அஜித்தின் " மங்காத்தா ", அஜித் ரசிகர் பட்டாளம் ஏராளம், மற்றும் ஜெ-வின் விருப்ப புத்தகத்தில் அஜித்தின் பெயர் இருப்பதால், இந்த படத்துக்கு ஜெ இடையுறு தரமாட்டார் என்பது தயாநிதியின் நம்பிக்கை....


மற்ற நடிகர்கள், தயாநிதியிடம் கொடுத்த கால்சீட்டை திரும்ப பெற்றுள்ளனர்...


கருணாநிதியின் பேரனான அருள்நிதி நடித்த உதயன் படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை.....


இதனால் கலைஞரின் பேர நிதிகள் படத்தை வாங்க , விற்க முடியாமல் திணறுகின்றன!....




இருக்காத பின்னே,
 
                " செய்த பாவங்கள்"
                தன்வினை தன்னை சுடும்!




1 கருத்து:

IP