ஞாயிறு, 3 ஜூலை, 2011

கொச்சி சிறுமியை போல், தமிழக சிறுமியையும் விபச்சாரத்தில் தள்ளிய பெண்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

இப்ப தான் கொச்சி சிறுமி வழக்கு விஸ்பரூபம் எடுத்து வருகிறது, அது அடங்கு ரதுக்கு உள்ள  தமிழக சிறுமியையும் பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்ய பட்டுள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!...


இந்த கொடுமை எங்க தெரியுமா நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரெட்டியார் புரத்தை சேர்ந்த அந்த பெண்ணை பாலியல் வன் கொடுமைக்கு தள்ளியதாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார் ....



பெயர் மாற்றப்பட்டுள்ளது:

தகவல்கள் அனைத்தும் ஒன் இந்தியா தளத்தில் பெறப்பட்டது...

பாளையங்கோட்டை, ரெட்டியார்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி ஜீவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாயை இழந்தவர். தந்தை நோயாளி. அண்ணன் சிறையில் உள்ளார். தம்பி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஜீவா வீட்டின் அருகில் உள்ள ஜெபகூடத்துக்கு சென்றார். அப்போது அங்கு பிரசாரத்துக்கு வந்த மேரி என்பவர் அவரது வீட்டு கஷ்டங்களை கேட்டறிந்தார். தான் உதவி செய்வதாக கூறி செல்போன் எண்ணை கொடுத்துச் சென்றார். சில நாட்களுக்கு பிறகு அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அப்போதுதான் அழைத்து சென்ற பெண்ணின் பெயர் மேரி அல்ல, துரைச்சி என்பதும், அவர் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் சிறுமிக்கு தெரிய வந்தது.

ஒரு வாரம் விருந்தும், ஜெபமுமாக கழித்த துரைச்சி, சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு மருந்து குடோனுக்கு அழைத்து சென்றார். அங்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து 4 பேருக்கு இரையாக்கினார். பின்னர் பாளைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார். சிறுமியுடன் சுத்தமல்லியை சேர்ந்த காயத்ரி என்பவரையும் அனுப்பி பணம் சம்பாதித்தார்.

வாடகை வீட்டில் இவ்வாறு சட்டவிரோதமாக செயல்படுவது வீட்டு உரிமையாளருக்கு தெரிந்து விட்டதால் உடனே வீட்டை மாற்றினார். கடந்த 30 நாட்களுக்குள் 3 வீடுகளுக்கு மாறி விபசார தொழில் நடத்தினார்.

இரண்டாவது வீ்ட்டில் இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு விஷயம் தெரிந்து விட அவருக்கும் சிறுமியை இரையாக்கியுள்ளார். இவ்வாறு 50க்கும் மேற்பட்டவர்கள் தன்னை கெடுத்ததாக சிறுமி கூறினார்.

வாடிக்கையாளர்களிடம் தலா ரூ.3000 பெற்று அதில் 1000 ரூபாயை கமிஷனாக எடுத்து கொண்டதாக தெரிவித்தார். அதிகமாக தொல்லை ஆரம்பித்ததால் அங்கிருந்து சிறுமி தப்பி வந்துள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர் கணேசன் கூறுகையில், சிறுமி காணாமல் போனதை மானத்துக்கு அஞ்சி வெளியில் சொல்லவில்லை. ஆனால் அவள் பலராலும் சீர்குலைக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் துணை கமிஷனர் அலுவலகத்து முறையிட சென்றேன். ஆனால் போலீசார் உள்ளே விடவில்லை. இவளை அழைத்து சென்றவர் இதேபோல் பல சிறுமிகளின் வாழ்வை குலைத்துள்ளார். போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கேரளாவைப் போல நெல்லையில் நடந்துள்ள இந்த பாலியல் குற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....



பாத்திங்களா!...

அப்பாவி சிறுமி ஐம்பது பேருக்கு இரை யா?

குடும்ப வறுமை, அடிமைத்தனம் இவைதான் காரணம்...


அரசு இலவச பொருட்களை தருவதை விட, 
கல்லூரி வரை கல்வியை இலவசமாகினால் , இது போன்ற கொடுமைகள் குறையும்...


24 மணி நேர மதுக்கடையை திறப்பதை விட,


ஊருக்கு ஊரு அரசு கல்லூரிகளை நிறுவி, கல்வி கொடுத்தாலே இது போன்ற தவறுகள் குறையும்....

2 கருத்துகள்:

  1. நல்ல பதிவு வாழ்த்துக்கள்! பணிகள் தொடரட்டும்! இது போல் நல்ல சமூக அக்கறை கொண்ட பதிவுகளை தொடர்ந்து வெளியிடுங்கள் வாழ்த்துக்கள். நட்புடன் - புதியதென்றல்.
    please go to visit - www.sinthikkavum.net

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    உங்களின் ஆதங்கம் ஒவ்வொரு தனி மனிதனின் ஆதங்கம். இறைவா இதை போன்ற காம கொடூரன்களிடமிருந்து அனைவரையும் காப்பாயாக

    அபு நிஹான்

    பதிலளிநீக்கு

IP