ஞாயிறு, 5 ஜூன், 2011

கதறிய கருணாநிதி!.... திருவாரூரில் நடந்த திருப்பம்!....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க..

நேற்றேயே தினம் நடைபெற்ற, திமுக நன்றி அறிவிப்பு  பொதுகூட்டத்தில் முன்னால் முதல்வர் கலைஞர் பேருரை நிகழ்த்தினார்...



முதலில் மக்களுக்கு தன்னுடைய பழைய அரசியல் வெற்றிகளை சொல்லிவிட்டு, என்னை 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்த என் அன்பு உடன் பிறப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்!....

அடுத்து, ஆளுநர் உரையின் குறைகளை தனகுறியே பாணியில் சொன்னார் அரங்கம் அதிர்ந்த கரவோசம்- அக இருந்தது....

அது இல்ல நம்ம மேட்டர்... கீழ படிங்க...

கனிமொழி பற்றி கூறும் பொழுது!...

மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடி விடும்

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.

அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் செல்வியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப் பெற்றிருக்கின்றோம்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

கதறிய கருணாநிதி:

கருணாநிதி பேசும்போது, குறிப்பாக கனிமொழி குறித்துப் பேசும்போது அவ்வப்போது கண்கலங்கி சில விநாடிகள் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். பின்னர் விம்மிய குரலில் அவர் தொடர்ந்து பேசினார். கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறை குறித்து அவர் பேசும்போது அழுது விட்டார்.....



கருணாநிதியின் பேச்சுகளில் இருந்து திமுக - காங்கிரஸ் முடியபோகிறது! என்று  தெரிகிறது....

சில திமுக-வினரும், இந்த திருவாரூர் கூட்டம் எங்களுக்கு திருப்பம் என்று கூறினார்கள்.....

டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்!
நான் யார்னு உனக்கு தெரியும்!...

அப்ப எதுக்குடா பேசுற!...

உழல் பண்ணுவாங்களாம்!

உடன்தயாவும் இருப்பாங்கலாம்!..

மாட்டிகிட்டா அலுவுன்வான்கலாம்!..

என்ன கொடுமை சார் இது? 

விரைவில் வருகிறது கூட்டணி மாற்றம்!... மேலும் இது தொடர்பான தகவல்களுடன் உங்களை சந்திக்றேன்!...

இனைதிருங்கள் நம்மோடு!... 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP