வெள்ளி, 6 மே, 2011

காவி பயங்கரவாதம்!.. சிம்புக்கு நெருக்கடியா!.....

என்னங்க சொல்றிங்க,

ஆமாங்க,

சிம்பு நடித்த "வானம்" படத்லே  காவி பயங்கரத்தால  வரும் கொடுமைகளை காம்முச்சங்க... அத பொறுக்க  முடியாத காவி அமைப்புகள் போர் கோடி தூக்கியுள்ளன!.................



 சிம்பு கட் அவுட்டுக்கு செருப்பு மாலை போட்ட பாஜக வினரைக் கண்டித்து, தி நகரில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் சிம்புவின் ரசிகர்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிம்பு நடித்து வெளியாகியுள்ள வானம் படத்தில் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பாஜக ஆதரவாளர்கள் சிலர், தாம்பரம் எம்ஆர் தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த சிம்புவின் கட் அவுட்டுக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தச் சம்பவம் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.

பாஜகவினரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை திநகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு எதிரே ஏராளமான சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிம்புவின் படத்துக்கு செருப்பு மாலை போட்டதற்காக பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிம்பு ரசிகர் மன்றம் சார்பில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.......


உண்மையா  சொன்னா கோபம் வருதோ!............

1 கருத்து:

  1. ஆமாங்க, உண்மையை சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரது இந்த காவி கும்பலுக்கு ஒன்னும் புதுசில்லையே!

    பதிலளிநீக்கு

IP