வெள்ளி, 25 மார்ச், 2011

போராடும் அதிமுக மற்றும் திமுக வி.வி.ஐ.பி கள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
இந்த தேர்தல் கலைகட்டிருச்சு!  
சில இடங்களில், இரு பிரிவினரின் வி.வி.ஐ.பி கள் ஒரே இடத்தில மோதுவதால் பட்டய கிளபிருச்சு தேர்தல்!

சொல்றேன் கேளுங்க!

கருணாநிதியின் மகனும், துணை முதல்வர் -மான ஸ்டாலின்-ஐ, எதிர்த்து அதிமுக மனிதநேய அறகட்டளை நிறுவனர் துரைசாமி-ஐ  நிறுத்தியுள்ளது, துரைசாமிக்கும் மக்கள் மனதில் நல்ல மதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது, இதனால் திமுகவினர் சற்று கலகத்துடன் வேலை செய்து வருகின்றனர்...

திமுகவின் பேச்சாளர்! அமைச்சர் பொன்முடி-ஐ, எதிர்த்து அதிமுக சி.வி,சண்முகத்தை இறக்கியுள்ளது.. இதனால் இரு தரப்புமே கலக்கத்துடனே வேலை செய்கின்றன!...

இது மட்டுமா, தென் தமிழகத்தில் சிவகங்கை திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து பலமிகுந்த ராஜகண்ணப்பன் இறங்கியுள்ளார், சிதம்பரத்தேயே அலறவைத்தவர்!..

இதேபோல :
   தென்காசி தொகுதி-> நடிகர் சரத்குமார் vs கருப்பசாமி பாண்டியன்,
   ஆயிரம் விளக்கு  தொகுதி-> 
ஸ்டாலின் கைகளில் ஒருவரான அசன் அலி ஜின்னா vs  வளர்மதி,           

இன்னும் சிலரும் இப்பட்டியலில் உள்ளனர் 

இதனால் இத்தேர்தலில்  இரு கட்சிகளின் வி.வி.ஐ.பி களும் கடுமையாக போராடுகின்றனர் !





1 கருத்து:

  1. தமிழக மக்களுக்கு மாற்றே இல்லை .. ஒரு பக்கம் வெறிநாய்க் கூட்டம் - இன்னொருப் பக்கம் சொறிநாய்க் கூட்டம்.. இரண்டும் அடித்துக் கொள்ளும் இலைகளில் மிஞ்சியவைகளைப் பொறுக்க காத்திருக்கும் தமிழன் படும் பெரும் போராட்டம் .. என்னக் கொடுமை சார் !!!

    பதிலளிநீக்கு

IP