ஞாயிறு, 20 மார்ச், 2011

கலைஞரின் ஏமாற்று வேலை!!! அம்பலம்.....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

காங்கிரஸ்- கூடுதலா 3 சீட், கேட்டப்ப, கலைஞர் என்ன செய்தார்.. கூட்டணி கட்சிகளின் இருந்து சீட் வாங்கி சரிக்கட்டினார்.. 
அனைவரும் அறிந்ததே...
ஆனால், முஸ்லிம் லீக்-டம் வாங்கிய சீட்டை ஏன் திருப்பி கொடுத்தார்!.... 
பாமக-விற்கு ஏன் தரவில்லை?.....


என்ன நடந்தது தெரியுமா!!!..
                                     முஸ்லிம் லீக்கு இப்ப மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.. அவை துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம்...
துறைமுகம் பகுதியின் வேட்பாளார் - திருப்பூர் அல்தாப், 

யார் இந்த அல்தாப்! இவர் தமிழ் மாநில தேசிய லீக் என்ற அமைப்பை நடத்தி வந்தவர், இவர் தன்னுடைய பத்திரிக்கையில் கலைஞர்-ஐ புகழ்த்து கொண்டு இருப்பார், தேர்தல் வரும் வேலையில் சீட் கேக்கவும் செய்தார்.

கலைஞர்-ஐ     புகழ்ந்தால் என்ன  நடக்கும் என்பது தெரியுமே!..
 ராச தந்திரியான  கலைஞர், நீ தனியா வந்து கேட்டு நான் கொடுத்தால் மற்ற அமைப்புகளுக்கெல்லாம் கொடுக்கவேண்டிருக்கும்...
 நீ முஸ்லிம் லீக்-உடன் இணைந்து விடு சீட் தருகிறேன் என்று சொன்னார், அதை போல் இணைத்தார் சீட்டையும் கொடுத்தார்....

ஆனால், மீடியா-களில் தியாகத்துக்கு கிடைத்த சீட் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர்

1 கருத்து:

IP